மதுரை: விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த காவுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 2011 முதல் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 2017-18ல் மட்டும் வழங்கப்படவில்லை. இதனால் அப்போது அவர்களால் நீட் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. எனவே, 2017-18ல் படித்த அனைவருக்கும் இலவச லேப்டாப் வழங்க உத்தரவிட ேவண்டும்’’ என்று கூறியிருந்தார்.