டெல்லி: ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தொகுதி வரையறை, சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமருடனான ஆலோசனையில் மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.