×

பிளஸ் 2 மாநில பாடத் திட்ட பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பிளஸ் 2 மாநில பாடத் திட்ட பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆந்திரா மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் பிளஸ் 2  பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


மாநில பாடத்திட்ட சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில், பிளஸ் 2  மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்  உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜூலை இறுதிக்குள் ஆந்திராவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.



Tags : Plus 2, for examination, score, by 31st, Supreme Court
× RELATED 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு...