உலகம் கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் முன்னோடி ஜான் மெக்கஃபி ஸ்பெயின் நாட்டு சிறையில் தற்கொலை..!! Jun 24, 2021 ஜான் மெக்காஃபீ ஸ்பானிஷ் மாட்ரிட்: கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் முன்னோடியான ஜான் மெக்கஃபி ஸ்பெயின் நாட்டு சிறையில் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் மெக்கஃபி, கடந்த 2020ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கு செல்லும் வழியில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு பற்றி அமெரிக்க அரசின் புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்பெயின் கூறியது. இதையடுத்து பார்சிலோனா அருகே உள்ள ரைன்டு என்ற சிறையில் மெக்கஃபி அடைக்கப்பட்டார். இவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு ஸ்பெயின் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கூடாது என்று 75 வயதான ஜான் மெக்கஃபி தொடர்ந்து நீதிபதிகளிடம் முறையிட்டு வந்தார். ஆனால் ஜான் மெக்கஃபியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க நீதிபதிகள் நேற்று ஒப்புதல் அளித்தனர். இந்நிலையில் ஜான் மெக்கஃபி தன்னுடைய சிறை அறையிலேயே உயிரிழந்துவிட்டதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிடம் அவரை ஒப்படைக்க நீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய சில மணி நேரத்தில் ஜான் மெக்கஃபி தற்கொலை செய்துகொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் மெக்கஃபி மீது அமெரிக்காவில் வரி ஏய்ப்பு மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜான் மெக்கஃபிக்கு 30 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அச்சத்தில் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள்,ஜான் மெக்கஃபி, தற்கொலை ஏய்ப்பு மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜான் மெக்கஃபிக்கு 30 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அச்சத்தில் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம்
கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது..!!
பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!!
இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக் கவுண்டவுன் தொடங்கியது.. ஜூலை 26ல் தொடங்கும் விழா கொண்டாட்டம்..!!
கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி..!!