சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.