டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார்; நலமாக உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்டா பிளஸ் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நெகட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது என கூறினார். கொரோனாவின் மற்றொரு மாறுபாடான இந்த டெல்டா பிளஸ் தொற்று (ஏ.ஒய்.1) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவிலும் தனது வேலையை காட்டி வருகிறது. 

அந்தவகையில் மராட்டியம், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 40 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.  இந்தநிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த சென்னை பெண் குணமடைந்து விட்டார். டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் நலமுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: