முக்கிய செய்தி இந்தியா ஐ.டி. என்று அழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பி.பி.ஓ. தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மோடி ட்வீட் Jun 24, 2021 மோடி டெல்லி: ஐ.டி. என்று அழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பி.பி.ஓ. தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கான பல முக்கிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது. இந்த நிலையில் ஓ.எஸ்.பி. என்னும் பிற சேவைகள் வழங்குனர்களுக்கான வழிகாட்டுதல்களை தாராளமயமாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பி.பி.ஓ.களுக்கான வலுவான உலகளாவிய இடமாக இந்தியா நிலை நிறுத்தப்படும். உள்நாடு மற்றும் சர்வதேச ஓ.எஸ்.பி.களுக்கு இடையிலான வேறுபாடு நீக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். பி.பி.ஓ. தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில், 2020 நவம்பரில் தாராளமயமாக்கப்பட்ட ஓ.எஸ்.பி. வழிகாட்டுதல்கள் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது வர்த்தகம் மற்றும் ஒழுங்குமுறை தெளிவை மேலும் எளிதாக்குகிறது. இது இணக்கச்சுமையை குறைக்கும். நமது தொழில்நுட்பத்துறைக்கு உதவும் என கூறினார். இதனால் பொதுவான தொலைதொடர்வு வளங்களை கொண்டுள்ள பி.பி.ஓ. மையம், இப்போது இந்தியா உள்பட உலகளவில் அமைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியும். வழிகாட்டுதல்களை தளர்த்துவதால், பி.பி.ஓ. நிறுவனங்களின் செலவுகளும் குறையும் என தெரிவித்தார்.
நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்தது: வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம்
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணி தொடங்கியது; அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்பு
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்; சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.40 லட்சம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக தேர்தல்களில் தொடர் தோல்வி.. 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அரசியலுக்குள் குதிக்கும் தமிழிசை சவுந்தரராஜன்.. வரலாற்றை மாற்றி எழுதுவாரா?
அதிமுக கொடி,இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு!!
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டி; மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்.. தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: அசுர வேகத்தில் திமுக கூட்டணி பங்கீடு.. எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சி போட்டி?.. முழு விவரம்
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி : ஒப்பந்தம் கையெழுத்தானது!!