×

லாரி டிரைவர் கொலையில் 3 வாலிபர்கள் சிக்கினர்: ஒருவர் தலைமறைவு

பல்லாவரம்: அனகாபுத்தூர் காமராஜர்புரம் பக்தவத்சலம் தெருவை சேர்ந்தவர் தெய்வேந்திரன்(40). இவரது மனைவி  சாந்தி(37).  இவருக்கு கலையரசன்(17), விக்னேஷ்(15) என்ற மகன்களும், திவ்யா(16) என்ற மகளும் இருக்கின்றனர். தெய்வேந்திரன் அதே பகுதியில் சொந்த லாரியை சரக்குகளை எடுத்துச் செல்ல ஓட்டி வந்தார். தினமும் லாரியை இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். அவ்வாறு லாரியை நிறுத்தி, தெருவை ஆக்கிரமிப்பதாக எதிர்வீட்டில் வசித்து வந்த சங்கர்(60) என்பவர் ஆட்சேபித்து வந்தார். இருவருக்கும் ஏற்கனவே இதனால் முன்பகை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தெய்வேந்திரன் லாரியை நிறுத்தும்போது, சங்கருக்கும், அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சங்கர் மற்றும் அவரது மகன்கள் மோகன்லிங்கம்(30), மோகன்ராஜ்(28), பிரபா(27) ஆகியோர் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து தெய்வேந்திரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.புகாரின்பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோகன்லிங்கம், மோகன்ராஜ் மற்றும் பிரபா ஆகியோரை கைது செய்தனர். மேலும், சங்கர் தப்பிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும், நிஜமாகவே லாரி நிறுத்தும் தகராறில் தான் டிரைவர் தெய்வேந்திரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Truck driver, murder, teenagers, absconding
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...