சென்னை: விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி வாலிபர்களுக்கு பயிற்சி அளித்த கஞ்சா வியாபாரி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(36). மெரினா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் நாங்கள் வசிக்கும் நடுக்குப்பம் 5வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிலர் அமர்ந்து கொண்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை கொளுத்தி மைதானத்தில் இருந்து மரத்தின் மீது விசியதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.