தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,596 பேர் கொரோனாவால் பாதிப்பு: 10,432 டிஸ்சார்ஜ்: 166 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை அறிக்கை !

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,43,415 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

* தமிழ்நாட்டில் மேலும் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 24,43,415 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து மேலும் 10,432 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 23,58,785 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழ்நாட்டில் கொரோனாவால் இன்று மேலும் 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 31,746 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 57 பேரும், அரசு மருத்துவமனையில் 109 பேரும் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 396 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 5,30,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழ்நாட்டில் இதுவரை 3,16,75,744 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,66,628 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் 52,884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,28,916 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,709 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 10,14,461 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,887 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மொத்தம் 273 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 204.

Related Stories: