சென்னை: நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மாணவர்களின் மனுவை ஏ.கே.ராஜனிடம் அளித்த பின் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என்பதே திமுகவின் கொள்கை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.