சென்னை செவிலியரின் கவனக்குறைவால் விரல் துண்டிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.75,000 இடைக்கால நிவாரணம் வழங்க ஐகோர்ட் ஆணை..!! Jun 23, 2021 சென்னை: குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரிய வழக்கில் ரூ.75,000 இடைக்கால நிவாரணம் தர உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடந்த மே 25ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஜூன் 7ம் தேதி பெண் குழந்தையின் இடது கையில் மருந்து செலுத்த பொருத்தியிருந்த ஊசியை அகற்றிய போது செவிலியரின் கவனக்குறைவால் கட்டைவிரல் துண்டானது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் விரலை பொருத்த மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. மேலும் கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் முறையிட்டும் பதில் இல்லை என பெற்றோர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் விரல் துண்டிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.75,000 இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்தார். தொடர்ந்து, இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 26ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று ஓட்டு கேட்பு கூட்டணி கட்சியினரை மதிக்காத மத்திய சென்னை பாஜ வேட்பாளர்: பாமகவினர் கடும் அதிருப்தி
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
அதுக்குள்ள சட்டமன்ற தேர்தலுக்கு போயிட்டாங்க தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் அன்புமணியா – அண்ணாமலையா? கொடுங்கையூர் நிகழ்ச்சியில் பாமக-பாஜ காரசார விவாதம்
செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு விடுவிக்ககோரிய மனு மீது மீண்டும் வாதிட கோரிக்கை: அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
குடோனில் பதுக்கப்பட்ட 4.38 லட்சம் லிட்டர் லாரி இன்ஜின் ஆயில் பறிமுதல்: 3 ஊழியர்கள் கைது, தம்பதிக்கு வலை
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம் வைக்கும் மோசடியை தடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரி ஏரியின் உபரி நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு செல்வதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது: தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி
சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தல் பொது பார்வையாளர்களை பொதுமக்கள் நேரில் சந்திக்கலாம்: மாநகராட்சி தகவல்
ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்: பயணிகளுக்கு அபராதம் சுங்கத்துறையினர் அதிரடி
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு
வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்