நவல்பூர் நகராட்சி வணிக வளாகம் பாராக மாறிய அவலம்-சுற்றுச்சுவர், கழிவறை அமைக்க கோரிக்கை

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை நவல்பூர் நகராட்சியில் உள்ள வணிக வளாகத்தில் சுற்றுச்சுவர் மற்றும் கழிவறை அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை  நவல்பூர் நகராட்சி வணிக வளாகத்தில் 30 கடைகள் அமைந்துள்ளன.  இதில் இரும்பு கடை, கம்ப்யூட்டர் சென்டர், ஸ்கிரீன் பிரிண்டிங், மெக்கானிக் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. மேலும், வணிக வளாகத்தில் சுற்றுச்சுவர் பாழடைந்தும், கேட் வசதியும் இல்லாததால், இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் பாராக மாறிவிடுகிறது.

இதனால் காலையில் கடைகளை திறக்கவரும் வியாபாரிகள், அங்கிருக்கும் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்ற மிகவும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக அப்பகுதி வியாபாரிகள் வணிக வளாகத்தில் புதியதாக சுற்றுச்சுவர், கேட் மற்றும் கழிவறை அமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். எனவே ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வணிக வளாகத்தில் புதியதாக கழிப்பிடம் அமைத்து, சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: