சேலம்: சேலம் பாப்பநாயக்கன்பட்டியில் விவசாயியை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயியை தாக்கிய காவலர் முருகனும் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் இருந்த விவசாயி முருகேசனை காவலர் தாக்கியதில் உயிரிழந்தார். போலீஸ் தாக்குதல் நடத்திய காட்சி வெளியான சில மணி நேரத்தில் உதவி ஆய்வாளர், காவலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.