விருதுநகர் : விருதுநகரில் உள்ள குல்லூர்சந்தை அணையில் நகராட்சி, ஊராட்சிகளின் கழிவுநீர் கலப்பதால் சாக்கடையாக மாறி வருகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் வழி செல்லும் கவுசிகா ஆற்றில் குல்லூர்சந்தை அணை விருதுநகர் நகராட்சி, ரோசல்பட்டி, சிவஞானபுரம், கூரைக்குண்டு, பாவாலி ஊராட்சிகளின் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு கட்டப்பட்ட அணை, கடந்த பல ஆண்டுகளாக சாக்கடையாக மாறி வருகிறது. அணைநீர் மாசடைந்ததால் விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாமல் உள்ளது. அணையை சுற்றிய பகுதிகளில் நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டது.