கூடலூர் : கூடலூர், பாடந்துரை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. இதில் அங்குள்ள ஆலவயல், கணியம்வயல், மாரக்கரை, மல்லம் வயல், பாடந்துரை மர்கஸ் பகுதிகள் வழியாக ஓடும் சிற்றாறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இப்பகுதி வழியாக ஓடும் சிற்றாறுகள் கடந்த பல வருட காலமாக தூர்வாரப்படாத காரணத்தால் கடந்த வருடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.