சென்னை ஏ.டி.எம். டெபாசிட் இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது வங்கியின் கடமை!: SBI ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!! Jun 23, 2021 எஸ்பிஐ பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை: ஏ.டி.எம். டெபாசிட் இயந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை வங்கிக்கு உள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் எஸ்.பி.ஐ., சி.டி.எம். இயந்திரங்களில் பணம் திருடப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்தார். தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து சி.டி.எம். இயந்திரத்தின் பாதுகாப்பை எஸ்.பி.ஐ. வங்கி மேம்படுத்த வேண்டும். ஏ.டி.எம்., சி.டி.எம். இயந்திரங்களின் செயல்பாடு, பணம் நிரப்புவது, அவுட்சோர்சிங் தருவதை கைவிட வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், வங்கிகளின் நேரடி பார்வையில் ஏ.டி.எம்., சி.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்ப வேண்டும் என தெரிவித்தார். எஸ்.பி.ஐ. வங்கிக்கு தமிழ்நாட்டில் 1233 பணம் டெபாசிட் இயந்திரங்கள் உள்ளன. 1,233 இயந்திரங்களில் சென்னையில் மட்டும் 300 சி.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இரவு நேரங்களில் ஏ.டி.எம்., சி.டி.எம். மையங்களில் காவலாளிகளை பணியமர்த்த வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதுவும் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக உள்ள ஏ.டி.எம். மையங்களில் 24 மணி நேரமும் காவலாளி இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். கடந்த ஒரு வாரமாக எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களை குறித்துவைத்து வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். சுமார் 15 லட்சம் வரை நூதன முறையில் கொள்ளையர்கள் திருடியுள்ள சம்பவம் எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக காவல்நிலையத்திற்கு தொடர் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுகுறித்து போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம். பாதுகாப்பை உறுதி செய்வது வங்கியின் கடமை என்று பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை