நாகை : நாகை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி நாகை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை, நாகை ஆகிய 4 தாலுகாவிற்கான ஜமாபந்தி நேற்று(22ம் தேதி) தொடங்கியுள்ளது. இதன்படி நாகை தாலுகாவிற்கான ஜமாபந்தி நேற்று நாகை தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. சமூகபாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் ராஜன் தலைமை வகித்தார்.