தமிழகம் கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது - தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி..!! Jun 23, 2021 காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் கர்நாடகா அணை மாத்தூர் அணை தமிழக சேலம்: கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரளாவின் வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 19ம் தேதி முதல் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு தலா 5 ஆயிரம் கனஅடி வீதம் மொத்தம் 10,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று ஒகேனக்கலை வந்தடைந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மேட்டூர் அணையை அடைந்தது. நேற்று காலை வினாடிக்கு 686 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2,376 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தற்போது வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் நேற்று காலை 89.96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 89.36 அடியாக சரிந்தது. மேலும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 51.92 டி.எம்.சி.யாக உள்ளது.
மலர் கண்காட்சியை மலர்ச்சியோடு வரவேற்க பிரையன்ட் பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டி: தயார் செய்யும் பணிகள் தீவிரம்
கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் அடிக்கல் நாட்டியும் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் நலத்துறை உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் திமுகவுக்கு ஆதரவு: இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி
ஆழ்வார்பேட்டையில் பயங்கரம்; மதுபான பார் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: திருநங்கையும் உயிரிழந்த பரிதாபம்