தமிழகம் நெல்லையில் தனியார் சிமெண்ட் ஆலை வளாகத்தில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!: போலீசார் விசாரணை..!! Jun 23, 2021 ஊசி நெல்லை: நெல்லையில் தனியார் சிமெண்ட் ஆலை வளாகத்தில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சங்கர் நகரில் இயங்கி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால் மிகவும் குறைவான தொழிலாளர்களுடன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளர்கள் பலரை பணிநீக்கம் செய்தும் ஏராளமானோரை குறைந்த நாட்கள் மட்டுமே பணிக்கு வருமாறு ஆலை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் ஆலை வளாகத்தில் 5 இடங்களில் பைப் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகவும் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் மர்மநபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர். புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் சம்பவ இடத்தில் அதிரடி ஆய்வு நடத்தி 2 பைப் வெடிகுண்டுகளை கண்டெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவற்றை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு
மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வந்துள்ள பெல்ஜியன் ஷெப்பர் வகையைச் சேர்ந்த 3 நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்
தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை: வழக்கில் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்: அன்புமணி
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை.. தாயின் ஆசை காதலன் வெறிச்செயல்..!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
கடலூரில் தேர்தலன்று இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த பெண் கீழே விழுந்து உயிரிழப்பு: போலீசார் விசாரணை
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்