இந்திய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 50,848 பேர் பாதிப்பு, 1,358 பேர் உயிரிழப்பு, 68,817 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,358 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

* புதிதாக 50,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,28,709 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,358 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,90,660  ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 68,817 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,89,94,855 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,43,194 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாட்டின் இதுவரை 29,46,39,511 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: