இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,00,28,709-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,358 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,90,660-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,89,94,855 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 6,43,194 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: