விவசாய கடன் பெற தடையில்லை

கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘ விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்காத  காரணத்தினால் அவர்கள் கடன் பெற முடியவில்லை என்று கூறினார்கள். ஏறத்தாழ 16  லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  அதில்  12,30,000 பேருக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது.  ரசீது பெறாதவர்களும் கடன்  பெற எந்த தடையும் இல்லை. விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்  கொள்ளலாம். பொள்ளாச்சி ஜெயராமன்: பொள்ளாச்சி நகராட்சியை சுற்றியுள்ள 5  கிராமங்கள் பொள்ளாச்சியோடு இணைந்துவிட்டது. ஜனத்தொகை மாநகராட்சியாகும்  அளவுக்கு உள்ளது. எனவே பொள்ளாச்சியை மாநகராட்சியாக்கி தர வேண்டும். மேலும்,  பொள்ளாச்சியை புதிய மாவட்டமாகவும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு விவாதம்  நடைபெற்றது.

Related Stories: