சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது காங்கிரஸ் கொறடா விஜயதரணி பேசியதாவது: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2003ல் சோனியா காந்தி, முத்தமிழறிஞர் கலைஞர் முயற்சியால் உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி 2024ல் தொடரும். சட்டமன்ற தேர்தல் வெற்றி கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறி கொரோனாவை ஒழிக்க போராட எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். பதவியேற்ற சில நாட்களிலேயே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். மத்தியில் ஆளும் அரசு கூட்டத்தை கூட்டவில்லை. ஆனால், திமுக அரசு மத்திய அரசுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அனைத்து கட்சிகளின் ஆலோசனை பெற்று கொரோனாவை ஒழிக்கும் வகையில் இந்த அரசு விரைவாக செயல்பட்டுள்ளது. 4 ஆயிரம் நிவாரணத்தை இத்தனை நெருக்கடியில் சென்றடைய செய்துள்ளனர்.