சட்டப்பேரவை மாற்று தலைவர்கள் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு, முதல் கூட்டத் தொடரின் மாற்றுத் தலைவர்களை அறிவித்தார். அதில், க.அன்பழகன், ராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், துரை சந்திரசேகரன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் மாற்றுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டப்பேரவையில் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் இல்லாத நேரத்தில் சட்டப்பேரவையை வழி நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பேரவை முன்னவர் துரைமுருகன் மதிப்பீட்டு குழுவிற்கு 16 உறுப்பினர்கள், பொதுக் கணக்கு குழுவிற்கு 16 உறுப்பினர்கள், பொது நிறுவனங்கள் குழுவிற்கு 16 உறுப்பினர்கள், அவை உரிமை குழுவுக்கு 14 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தல் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

Related Stories: