விதிகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த மண்டப உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நேற்று வரை 340 உரிமையாளர்களிடமிருந்து சுப நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் பெறப்பட்டது. இந்தப் பதிவுகளின் அடிப்படையில் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், கடந்த இரண்டு நாட்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 மண்டபங்கள் மற்றும் சுப நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாத நபர்கள் என மொத்தம் 10,520 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மண்டப உரிமையாளர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Related Stories: