பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி கிருமிநாசினி தயாரித்து விற்பனை செய்த 4 பேர் கைது

சென்னை: பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக கிருமிநாசினிகள் தயாரித்து விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் பிரபல நிறுவனங்கள் பெயரில் கிருமி நாசினிகளை போலியாக தயாரித்து அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக, சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவுக்கு புகார்கள் வந்தது.  அதன்பேரில், மயிலாப்பூர் ராஜசேகரன் தெருவில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பிரபல நிறுவனங்களின் பெயரில் சட்டவிரோதமாக கிருமிநாசினிகள் தயாரித்து விற்றது தெரியவந்தது.  இதுதொடர்பாக, சாகர் படேல் (38), ரமேஷ் (36), பர்மா பர்வாதியா, பவன்குமார் (42) மற்றும் பிரகாஷ் (33) ஆகியோர் மீது போலீசார் 3 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ₹6 லட்சம் மதிப்புள்ள கிருமிநாசினிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: