அண்ணாநகர்: மதுரவாயல் லட்சுமி நகர், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் (37), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரேவதி (34). தம்பதிக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று மதியம் 12 மணியளவில், முருகன் தனது மனைவியை காணவில்லை என்று மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரேவதியை தேடி வந்தனர். இந்நிலையில், நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள முட்புதரில் கைகள் கட்டப்பட்டு, முழுவதும் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில், முருகனுக்கு தகவல் கொடுத்து, அவரை அங்கு வரவழைத்தனர்.