விமான நிலையத்தில் நோயாளி போல் நடித்து 20 லட்சம் தங்கம் கடத்தியவர் கைது

சென்னை:  துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது அபுபக்கர் (62) என்பவரை, நோயாளியை போல் சக்கர நாற்காலியில் வைத்து விமான நிலைய ஊழியர் வெளியே தள்ளி வந்தார்.  சுங்க சோதனை பிரிவில் வழக்கமாக சக்கர நாற்காலி பயணியை நிறுத்தி சோதனையிடாமல் அனுப்பி விடுவார்கள். எனவே விமான நிலைய ஊழியர் கிரீன்சேனல் வழியாக சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு சென்றார். ஆனால் சுங்கத்துறையினருக்கு அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை மீண்டும் உள்ளே வரவழைத்து சோதனை நடத்தினர். அப்போது, அவர் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்களில் 4 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அதன் மொத்த எடை 465 கிராம். அதன் மதிப்பு ₹20 லட்சம். இதையடுத்து நோயாளியாக நடித்து சென்னை வந்த அபுபக்கரை சுங்கத்துறையினர் கைது செய்து, தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: