சென்னை: தேனாம்பேட்டை திரு.வி.க.நகரில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் குணநேசன். இவர் தனது நண்பர்களுடன் கடந்த வாரம் வீட்டின் முன்பு தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை பார்த்து, ‘இந்த நேரத்தில் உங்களுக்கு என்ன டா விளையாட்டு’ என்று கூறியதுடன், எழுந்து வீட்டிற்குள் போங்க டா என மிரட்டியுள்ளனர். 2 பேர் சாதாரண உடையில் வந்து மிரட்டுகிறார்கள் என்று நினைத்து, நாங்கள் விளையாடினால் உங்களுக்கு என்ன, போதையில் எங்களை வந்து மிரட்டுகிறீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், நாங்கள் போலீஸ், எங்களையே மிரட்டுகிறீர்களா என்று கூறி ஆட்டோ டிரைவர் குணநேசனை கடுமையாக தாக்கியுள்ளனர்.