போதையில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 காவலர்கள் சஸ்பெண்ட்: போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

சென்னை: தேனாம்பேட்டை திரு.வி.க.நகரில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் குணநேசன். இவர் தனது நண்பர்களுடன் கடந்த வாரம் வீட்டின் முன்பு தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை பார்த்து, ‘இந்த நேரத்தில் உங்களுக்கு என்ன டா விளையாட்டு’ என்று கூறியதுடன், எழுந்து வீட்டிற்குள் போங்க டா என மிரட்டியுள்ளனர்.  2 பேர் சாதாரண உடையில் வந்து மிரட்டுகிறார்கள் என்று நினைத்து, நாங்கள் விளையாடினால் உங்களுக்கு என்ன, போதையில் எங்களை வந்து மிரட்டுகிறீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், நாங்கள் போலீஸ், எங்களையே மிரட்டுகிறீர்களா என்று கூறி ஆட்டோ டிரைவர் குணநேசனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர் ஆட்டோ டிரைவர் குணநேசன் மனைவி வடிவுகரசி (32) சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை யில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனிப்படையில் வேலை செய்து வரும் மணிகண்டன் மற்றும் ஞானசேகரன் ஆகியோர் மது போதையில் ஆட்டோ டிரைவரை தாக்கியது தெரியவந்தது.  இதுபற்றி அறிந்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவலர்கள் மணிகண்டன் மற்றும் ஞானசேகரனை  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், 2 காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: