பெண்களுடன் இருந்த அமமுக செயலர் கைது

சென்னை: தனியார் விடுதியில் இளம்ெபண்களுடன் தங்கியிருந்த அமமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டார். உத்திரமேரூர் பேரூராட்சியில் தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த விடுதிக்கு சென்றனர். சோதனையில் அங்கு இளம் பெண்களுடன் தனித்தனி அறையில் உல்லாசமாக இருந்த 2 பேரை பிடித்தனர்.விசாரணையில் அமமுக நகர செயலாளர் கார்த்திக் (38) மற்றும் மருதம் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் (47)  என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அங்கிருந்து மீட்கப்பட்ட 2 பெண்களை போலீசார் காஞ்சிபுரம் அருகே உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: