திருமணம் ஆகாத 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை: வாலிபர் மீது போக்சோ வழக்கு

வேலூர்: திருமணம் ஆகாத நிலையில் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரை தேடி வருகின்றனர். வேலூர் கஸ்பாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 18ம்தேதி இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் வேலூர் அரசினர் பென்ட்லேன்ட் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையை பென்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது குழந்தையின் தாய்க்கு 17 வயது என்பதும், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதும் டாக்டருக்கு தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனை சார்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை கஸ்பாவை சேர்ந்த இர்பான் என்ற வாலிபர் ஒருவர் காதலித்துள்ளார். அப்போது பெண்ணிடம் அந்த வாலிபர் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: