கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி

திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்து இருக்கிறது. இந்த வைரஸ் மூலம் தான் 3வது அலை பரவும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த வைரஸ் தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, அரியானா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 20 பேருக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் இந்த வைரஸ் 3 பேருக்கு பரவி உள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் 2 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒருவருக்கும் பரவி உள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories: