அரியலூர்: அரியலூர் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிபோது கண்டெடுக்கப்பட்ட 9 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட பெருமாள் சுவாமி சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரையான்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 4 அடி தோண்டியபோது கற்சிலை தென்பட்டது. இதனையடுத்து அந்த கற்சிலையை மேலே எடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் முயன்றனர். ஆனால் அந்த சிலை 9 அடி உயரத்தில் இருந்ததால் பொதுமக்களால் மேலே எடுக்க முடியவில்லை.