இந்தியா 5 ஆண்டுகள் சமூகமாக ஆட்சி நடக்க புதுச்சேரி சபாநாயகர் அறையில் திடீர் சிறப்பு பூஜை!: சபாநாயகருக்கு கருங்காலி கோல் கொடுத்த சிவனடியார்கள்..!! Jun 22, 2021 புதுச்சேரி எபோனி கோல் சபாநாயகர் புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் 5 ஆண்டுகள் சுமூகமாக நடக்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சபாநாயகர் அறையில் பூஜை நடத்தி பேரவை தலைவர் செல்வம் கையில் கருங்காலி கோல் கொடுத்தனர். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் மட்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்னும் அமைச்சரவை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அதேபோல் இந்த கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே அவ்வபோது மோதல்கள், குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் எந்தவித தடங்களும் இன்றி அடுத்த 5 வருடம் சிறப்பான முறையில் ஆட்சி நடத்திட வேண்டி பேரவையில் உள்ள சபாநாயகர் செல்வம் அறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவண்ணாமலை மற்றும் பழனியில் இருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், சிறப்பு பூஜை செய்து சபாநாயகர் செல்வத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அவருக்கு 2 கருங்காலி கோல்களை வழங்கினர். சபாநாயகர் பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பூஜை செய்து கருங்காலி கோல்களை சிவனடியார்கள் வழங்கியதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். சபாநாயகர் அறையில் காவி உடையில் சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்து கருங்காலி கட்டை கொடுக்கப்பட்ட விவகாரம் புதுச்சேரி சட்டமன்றத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை திகைப்படைய செய்தது.
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மக்களவைத் தேர்தல்: உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: காங். பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!
வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்