முதுகுளத்தூரில் பள்ளி மாணவியிடம் பாலியல்ரீதியாக பேசிய புகாரில் ஆசிரியர் போக்சோவில் கைது

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் பள்ளி மாணவியிடம் பாலியல்ரீதியாக பேசிய புகாரில் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் அறிவியல் ஆசிரியர் ஹபீப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் பாலியல்ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. தனது வீட்டுக்கு வராவிட்டால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

Related Stories: