திருத்தணி: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 2 டன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு திருத்தணி வழியாக செம்மர கட்டைகள் கடத்திவரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கீழ்கண்டிகை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 2 டன் செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த ஒருவர் தப்பியோடிவிட்டார்.