உத்திரமேரூர்: உத்திமேரூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பெண்ணுடன் ‘ஜாலி’யாக இருந்த அமமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (38). இவர், உத்திரமேரூர் நகர அமமுக செயலாளராக இருந்து வருகிறார். உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் (47). இவர்கள், இருவரும் நேற்று உத்திரமேரூர் நகரில் உள்ள ஒரு லாட்ஜில் தனித்தனி அறைகளில் பெண்களுடன் ஜாலியாக இருப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தெரியவந்தது.