உத்திரமேரூரில் பரபரப்பு: லாட்ஜில் பெண்களுடன் ‘ஜாலி’ அமமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது

உத்திரமேரூர்: உத்திமேரூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பெண்ணுடன் ‘ஜாலி’யாக இருந்த அமமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (38). இவர், உத்திரமேரூர் நகர அமமுக செயலாளராக இருந்து வருகிறார். உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் (47). இவர்கள், இருவரும் நேற்று உத்திரமேரூர் நகரில் உள்ள ஒரு லாட்ஜில் தனித்தனி அறைகளில் பெண்களுடன் ஜாலியாக இருப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கார்த்திக் தங்கியிருந்த லாட்ஜில் சோதனை நடத்தியபோது, ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருப்பது தெரிந்தது. இவரது பக்கத்து அறையில், வீரராகவன் ஒரு பெண்ணுடன் ஜாலியாக இருந்தது தெரிந்தது. இருவரும் போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களுடன் இருந்த 2 பெண்களையும் போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை காஞ்சிபுரத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: