சென்னை சிமெண்ட் விலை ரூ.30 குறைப்பு!: கட்டுமான பொருட்கள் விலையை மேலும் குறைக்க அரசு நடவடிக்கை...அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..!! Jun 22, 2021 அமைச்சர் சென்னை: தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிமெண்ட் விலை 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஆட்சிக்காலம் முதலே படிப்படியாக அதிகரித்து வந்ததாக குறிப்பிட்டார். கடந்த மார்ச்சில் 420 ரூபாயாக இருந்த சிமெண்ட் 490 ரூபாய் வரை உயர்ந்ததாகவும், உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அது தற்போது 460 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சிமெண்ட் விலையை மேலும் குறைப்பதாக நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலையை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்: பயணிகளுக்கு அபராதம் சுங்கத்துறையினர் அதிரடி
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு
வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் கொண்டு வந்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி
பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 16 தாசில்தார்களுக்கு தண்டனை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு
குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி கடைசி நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வரி வசூல் மையங்களும் இயங்கும்: வாரியம் அறிவிப்பு
தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா பொருட்காட்சி நிறைவு: 5.86 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்: சுற்றுலாத்துறை தகவல்