பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடாவின் பஜத்துார் என்ற கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சைஜூ - தீப்தி தம்பதியருக்கு இரண்டரை வயதில் ஷ்ரேயா என்ற மகள் இருந்தார். அவரது, வீட்டில் எலித்தொல்லை அதிகம் உள்ளது என்பதற்காக எலி விஷம் கலந்த டியூப்பை, நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர். விளையாடியபடியே, நாய் கூண்டு அருகில் சென்ற ஷ்ரேயா, எலி விஷத்தை வாயில் போட்டு தின்றுள்ளார். வீட்டிலிருந்த யாரும் இதனை கவனிக்கவில்லை.