எலி மருந்து தின்ற சிறுமி பலி: கர்நாடகாவில் சோகம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடாவின் பஜத்துார் என்ற கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சைஜூ -  தீப்தி தம்பதியருக்கு இரண்டரை வயதில் ஷ்ரேயா என்ற மகள் இருந்தார். அவரது, வீட்டில் எலித்தொல்லை அதிகம் உள்ளது என்பதற்காக எலி விஷம் கலந்த டியூப்பை, நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர்.  விளையாடியபடியே, நாய் கூண்டு அருகில் சென்ற ஷ்ரேயா, எலி விஷத்தை வாயில் போட்டு தின்றுள்ளார். வீட்டிலிருந்த யாரும் இதனை கவனிக்கவில்லை.

எலி விஷம் தின்ற குழந்தை வாந்தியெடுத்து, மயங்கி விழுந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்து, உடனடியாக உப்பினங்கடி மருத்துவமனைக்கு ஷ்ரேயாவை அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக, மங்களூரின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உப்பினங்கடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: