சென்னை: தமிழர்களை தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் அளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் எப்படி பணி வழங்கினார்கள் என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் கூறியுள்ளார்.