நாகை: ஜூன் 30ம் தேதி முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல நாகை, காரைக்கால் மீனவர்கள் முடிவு எடுத்துள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற 37 கிராம மீனவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தடைகாலம் முடிந்த பின்னும் கடலுக்கு செல்லாமல் இருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.