முக்கிய செய்தி சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு: ஜாமின் கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு Jun 22, 2021 அஇஅதிமுக எக்சு அமைச்சர் மணிகண்டன் உயர் நீதிமன்றம் சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரிய வழக்கில் காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு பற்றி அடையாறு நிதி மகளிர் காவல் நிலையம் பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிகண்டன் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 24-க்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நடிகை அளித்த புகாரில் பெங்களுருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சென்னை அடையாறு போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டார். அதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, மணிகண்டனை ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!
100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு : தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!!
கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொதுவாழ்க்கையை நடத்தியவர்: கணேசமூர்த்தி மறைவுக்கு வைகோ புகழஞ்சலி
2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா கோஷம் எழுப்பும் மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம்: ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் பரபரப்பு பேட்டி
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு: ஆம் ஆத்மி கட்சி தகவல்
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது; வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: இறுதி வேட்பாளர் பட்டியல் 30ம் தேதி வெளியாகும்
விருதுநகர் தொகுதியில் வெடித்த பாஜக உட்கட்சிப் பூசல்: ராதிகாவுக்கு எதிராக களமிறங்கிய பாஜக நிர்வாகியால் பரபரப்பு