முக்கிய செய்தி சென்னை தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் நிகழ்வுகள் தொடங்கியது!: மறைந்த உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்..!! Jun 22, 2021 தமிழக சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார். இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியவுடன் சட்டப்பேரவை சபாநாயகர் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்து கொண்டிருக்கிறார். இதற்கு பின்பாக இரங்கல் தீர்மானமானது நிறைவேற்றப்பட இருக்கிறது. பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக், பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானமானது பேரவையில் நிறைவேற்றப்படவிருக்கிறது. இதையடுத்து வழக்கமான சட்டப்பேரவை விதிகளின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் சட்டமன்ற பேரவையினுடைய மாற்று தலைவர்களுக்கான பட்டியலையும் அறிவிக்கிறார். மேலும் பல்வேறு குழுக்கள் பேரவையில் அமைக்கப்படவிருக்கிறது. அதன் அடிப்படையில் மதிப்பீட்டு குழு, பொது கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு மற்றும் அவை உரிமை குழுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான முன்மொழிவை, அவை மூத்தவர் துரைமுருகன் முன்மொழிய இருக்கிறார். இதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கவிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் உதயதீரணும் அதற்கான முன்மொழிவை பெற்று ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை தொடங்கிவைக்கிறார். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். அதில் திமுக சார்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் உதயசந்திரன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், ஜவாஹிருல்லா ஆகியோர் பேச இருக்கிறார்கள். அதிமுக-வின் சார்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ரவி மற்றும் பொள்ளாச்சி ராமன் ஆகியோரும் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் பேசுகின்றனர். காங்கிரசை பொறுத்தவரையில் விஜயதரணி பேசுகிறார். இந்த கூட்டத்தில் மறைந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்
தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
24 நாட்களில் 8,465 கி.மீ. பயணித்து 1.24 கோடி பொதுமக்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு !
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்