மாணவிக்கு பாலியல் தொல்லை; ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக மே 30ல் கெபிராஜை போலீசார் கைது செய்தனர். கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என சிபிசிஐடி அறிவித்திருந்த நிலையில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கெபிராஜிடம் பயிற்சி எடுத்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: