சட்டசபை கூட்டத் தொடரின் 2 வது நாள்: மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எழுத்தாளர்களுக்கு இரங்கல்

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ரா.விவேக்கிற்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. துளசி அய்யா வாண்டையார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ காளியண்ணணுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாளான இன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது.

Related Stories: