இஸ்லாமாபாத்: ‘பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அரை குறை ஆடை அணிவதே காரணம்’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்ஓபி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், ‘‘பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு. நாட்டில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது மோசமானது’’ என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.