ரியோ டி ஜெனிரோ,: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கொலம்பியா அடித்த சுய கோலால் பெரு அணியிடம் பரிதாபமாக வீழ்ந்தது. கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டியின் பி பிரிவில், குயானியாவில் நடந்த லீக் ஆட்டத்தில் கொலம்பியா-பெரு அணிகள் மோதின. இரண்டு அணிகளும் முதல் வெற்றிக்கு மல்லுக்கட்டின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பெரு அணியின் செர்கியோவும், 53வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் மிகுயெல் பெனால்டி மூலமாகவும் கோல் அடித்தனர். அதனால் ஆட்டத்தின் 63வது நிமிடம் வரை இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. 64வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா அடித்த சுய கோலால் பெரு முன்னிலை பெற்றது. அதே நிலை கடைசி வரை தொடர பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை சுவைத்தது.