நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 363 பேருக்கு, முதல் தவணையும், 60 ஆயிரத்து 320 பேருக்கு இரண்டாம் தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு, கல்வி பயில செல்வோர், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்போர் நலனை கருத்தில் கொண்டு 2வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை 28 நாட்கள் முடிந்தவுடன் 84 நாட்களுக்கு முன்பே போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.