முக்கிய செய்தி இந்தியா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா; ஒரேநாளில் 69.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை Jun 21, 2021 இந்தியா கொரோனா டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 69.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது. மாலை மணி 5 வரை நாடு முழுவதும் 69.25 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் இன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தொடர்ந்து 6-வது நாளாக 30 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 262 கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி 27,09,08,312 அதாவது 27 கோடிப் பேர் இந்தியர்கள். இந்தியாவில் நூறு பேரில் 20 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொணடுள்ளனர். ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 16 சதவீதமாகவும், இரண்டு தவணையையும் செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 3.6 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த தினசரி தடுப்பூசி இலக்கு 43 லட்சம் ஆகும். ஜூன் 14 அன்று 38.2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நாட்டில் தினசரி தடுப்பூசி அளவு முதல் முறையாக இன்று 50 லட்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பு திட்டத்தின் படி, மூன்றாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 1 ஆம் தேதி 45+ மக்கள் தொகைக்கு அல்லது 34.51 கோடி மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு!
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும்: சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு